என் நினைவுகள் என்றும் உன்னுடனே


நான் விருப்பப்பட்டது 
என்றும் தொலைவில் தான்..
அன்று நிலவு!
இன்று நீ!

**




உன் அழைப்புக்கள் நிராகரிப்பு,

குறுந்தகவல் புறந்தள்ளுதல்,
ஓரப்பார்வைகள் ஒதுக்குதல்
இப்படி 
என்னவாயினும் செய்வேன்
உன் செல்லக்கோபத்தைப் பெற!

**


உன் நினைவுகளே 

வாழ்க்கை 
என்றான பிறகு

நீ 

தொடுதூரத்தில்
இருந்தாலென்ன?
தொலை தூரத்தில் 
இருந்தால் என்ன ?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக