உன்னுடன்


என்னை
கடந்துபோகும் காற்றை உணர்கிறேன்
உன் முச்சின் வெப்பத்தில்
காற்றும் சுவாசித்ததை உணராமல்...

உணர்வுகளோடு பயணம் செய்கிறேன்
என் விழி சிந்திய
ஒரு துளி நீரில்
நீ கலந்ததை அறியாமல்….

என்ணை தொடரும் போதுதான் அறிகிறேன்
தேகம் தீண்டா
என் விரல் நுனியில்
உன் பாதச்சுவட்டின் நிழல் பட்டதை….

அமைதியின் யுகம் கேட்கிறேன்
நினைவுகள்
நிழல் கொண்டாலும்
என் நெஞ்சை கசக்கி
உன்னை மீட்க பார்...

ஏன் இதயம் உடைத்தாய்


உன்னையே உயிராக எண்ணிய
என் மனம் தெளிந்துவிட்டது இன்று
உன் பொழுதுபோக்கிற்காகத்தான்
நீ காதல் எனும் நாடகம் ஆடினாய் என்று....

ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய என் இதயமோ
நான் சொல்லும் உண்மையை கேட்க மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம் தவிக்கிறது....

எனக்காக ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என் இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன் பழகியது ஒரு பொய் நாடகமே என்று....

காதல்


காதல் 

சேரதுடிப்பது மட்டுமல்ல காதல் 

சேராமல் போனாலும் உன் நலனில் 

அக்கரைகொள்வதே 

உண்மையான காதலடா..


கோபம் கூட ஒரு சுகம் தான்


உறவின் மீது அன்பு வைப்பதைவிட
உன்னை விரும்பும் உள்ளத்தின் மீது
அன்பு வைத்து பார்.........!
அன்பு வைத்த உள்ளத்தின்
கோபம் கூட
உனக்கு சுகமாகத்தான் தெரியும்.......





வாழ்க்கை


வாழ்வில் தோல்வி அதிகம்,
வெற்றி குறைவு,
- என வருந்தாதே.....!
செடியில் இலைகள் அதிகம் என்றாலும்,
அதில் பூக்கும் ஒரு
சில மலருக்கே மதிப்பு அதிகம்........!

மரணமே வந்தாலும்.



அம்மா வயிற்றில் சுமந்தார்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தார்
நண்பா
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்
என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்
உறவாக அல்ல என் உயிர் நட்பாக
புரியாத நட்புக்கு அருகில் இருந்தது...


நிலாக்காலம்


நினைவுகளுக்கு வர்ணம் சேர்த்த
பௌர்ணமி இரவுகள்
தனிமையின் விம்பம் காட்டிய
ஒற்றை நிலவு
நனைந்த விழிகளை
துடைத்துப் போன தென்றல்
உடைந்து போன உணர்வுகளை
பகிர்ந்துகொண்ட கருமை
இதயம் சுமந்த பாரம்
சில மணி நேரம்
இறக்கி வைத்த படிக் கட்டு
அந்த நாட்களின்
பசுமையான வாசனை
இன்னும் என் நினைவுகளுக்குள்
ஆழமாக
காலம் விட்டுச் சென்ற
உருவம் இல்ல புகைப் படங்கள்!!!

என் அம்மாவுக்கு


அம்மா என்ற பாசையின்
அழியாத செல்வம்
அதரத்தில் உச்சரிக்கும்
அமிர்த வார்த்தை

அன்பு என்ற ஆலயத்தின்
அர்ச்சனை மந்திரம்
அறிவை ஊட்டும்
அகராதி ஊற்று

அன்னை மடியில்
அலைவீசும் நேசம்
அகத்தின் மென்மையில்
அரவணை அச்சகம்

அல்லல் தீண்டினும்
அனுசரிக்கும் ஆத்மா
அகிலம் போற்றும்
அதிசய அவதாரம்.

பாச வலிகள்


போதுமடா 
நீ தந்த பாசவலிகள்
நான் பார்க்கின்ற போது
நீ பார்க்காதிருப்பதும்
நான் பேசுகின்ற போது 
நீ பேசாதிருப்பதும்
போதுமடா...
சின்ன சின்ன வார்த்தைகளினூடே
செல்லமாக நீ சிரிப்பதும் 
கண்களால் சைகை காட்டிவிடுவதும் 
போதுமடா ...
என் வீட்டுச் சாலையோரம்
எதிரெதிரே சந்திப்பதும்
வானம் பார்த்து பூமி  பார்த்து 
மணிக்கணக்காய் மெளனிப்பதும்   
போதுமடா ...
எனக்காக நீயும்
 உனக்காக நானும்...

Roja



வாயில்லாமல் போனால் வார்த்தை இல்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே.....

என் நண்பிக்காக


வானமும் பூமியும் இறைவனின் சொத்து, 
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து, 
நீயும் நானும் கடவுளின் படைப்பு, 
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு' 

"கண்ணில் ஒரு மின்னல்" 
"முகத்தில் ஒரு சிரிப்பு" 
"சிரிப்பில் ஒரு பாசம்" 
"பாசத்தில் ஒரு நேசம்" 
"நேசத்தில் ஒரு இதயம்" 
அந்த "இதயத்தில் என் தோழி நீ"






நட்பைக் கொடு


என்னிடம் இருந்த 
ஒரு இதயத்தையும் 
பறித்துக் கொண்டது காதல்! 
எனக்காக 
ஒரு இதயத்தையே 
பரிசளித்தது நட்பு!

கஷ்டங்களில் 
யோசித்தது காதல்! 
யோசிக்காமல் 
கைகொடுத்தது நட்பு!

துயரங்களை நோக்கி 
இழுத்துச்சென்றது காதல்! 
உயரங்ளை நோக்கி 
அழைத்துச் சென்றது நட்பு!

கட்டுப்பாடுகளை 
தளர்த்த முயற்சித்தது காதல்! 
கடமைகளை 
உணர்த்த முயற்சித்தது நட்பு!

என் இலட்சியங்களை 
கனவாக்கியது காதல்..

ஒரு பெண்ணின் சோகம்


இதய  வீணை  தூங்கும்  போது பாட  முடியுமா  
இரண்டு  கண்கள்  இரண்டு காட்சி  காண  முடியுமா 

உதடு  சிரிக்கும்  நேரம்  உள்ளம்  சிரிக்குமா  
உருவம்  போடும்  வேஷம்  உண்மை  ஆகுமா  
விளக்கை  குடத்தில் வைத்தால் வெளிச்சம்  தோன்றுமா 
வீட்டு  குயிலை  கூட்டில்  வைத்தால்  பாட்டு  பாடுமா ..பாட்டு பாடுமா. 

மனதை  வைத்த இறைவன்  அதில்  நினைவை  வைத்தானே  
சில  மனிதர்களை  அறி...

எனக்கு பிடித்த பாடல்



பாறையில் செய்தது என் மனம் என்று
தோழிக்கு சொல்லி இருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்.

IRUVAR





திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகை பாராய்
அற்றைத் திங்கள் அந் நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றைப் பார்வை பார்த்தவனும் – நீயா......